Friday, September 30, 2005

கிளி ஜோசியம் - 1

ஒரு ப்ளாக்கில் நண்பர் ஒருவர் குமுதம் ஜோசியம் பற்றி கூறியிருந்தார். சரி ! என்ன தான் போட்டிருக்குன்னு போய் பாத்தா...செம காமெடிப்பா. இப்பொவெல்லாம் டி.வி-ல காலைலயே ஆரம்பிச்சுடறாங்க. "இன்னைக்கு உனக்கு சனி. நாசமா போய்டுவே..நீ செய்ற காரியம் எதுவும் உருப்படாது" - இப்படி போகும். அப்புறம் நாள் வெளங்குனது மாதிரி தான். அது தவிர சில கோஷ்டி கலர் கலரா கல் விக்க ஆறம்பிச்சுடுது. அப்புறம் என்ன..மஞ்ச கலரு ஜிங்கிச்சா...பச்ச கலரு ஜிங்கிச்சா தான். காசு வர ஒரு கல்லு.. கல்யாணம் ஆக ஒரு கல்லு...மக்களும் கலர் கலரா கைல போட்டுக்கிட்டு கலக்க தான் செய்றாங்க. ஆனா ஒன்னும் உருப்பட தான் மாட்டேங்குது.

இன்னொரு கும்பல் அம்மா அப்பா ஆசையா வெச்ச பேரை மாத்த சொல்லி காசு பாத்துக்கிட்டு இருக்கு. "உங்க பேருல முன்னாடி ஒரு கால போட்டு ( துனை எழுத்து ) பின்னாடி ஒரு கைய போட்டா...வாழ்க்கையில எங்கேயோ போய்ருவீங்க" - இப்படி போகும் உரையாடல்.

இந்த கும்பல் எல்லாம் ஒரே மாதிரி விபூதி பட்டையை அடித்து கொண்டு பக்தி பழமாக இருக்கும். மக்கள் அப்போ தான் நம்புவாங்களாம்.

இதெல்லாம் பெரிய பட்ஜெட் ப்ராஜெக்ட். கிராமத்துல பாத்தீங்கன்னா சின்ன பட்ஜெட்ல சின்னதா ஒரு கிளி (இல்லன்னா எலி), ஒரு பத்து சாமி படம் வச்சு சில பேரு காலத்த ஓட்டிட்டு இருப்பாங்க. கிளியும் அது பாட்டுக்க கொடுக்கற பொறிகடலைய கொறிச்சிக்கிட்டு, தொறந்து விட்டா அதுக்கு புடிச்ச படத்தை எடுத்து கொடுக்கும். அனுமார் படம் எடுத்திச்சுன்னா, அது என்னை கொரங்குன்னு நினைச்சுட்டுன்னு அர்த்தம். ரெண்டு பொண்டாட்டியோட முருகர் வந்தா , அது என் பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்கி கொடுக்க முடிவு பண்ணிடுச்சுன்னு அர்த்தம்.

இன்னொரு கும்பல் நீங்க திருச்செந்தூர் போனீங்கன்னா பாக்கலாம். ஹாரி பாட்டர் படத்துல கொளந்தைங்கல்லாம் கைல ஒரு குச்சி வச்சிக்கிட்டு பூச்சாண்டி காட்டுமே, அதே மாதிரி குச்சி வச்சிக்கிட்டு குறி சொல்ல (குழி பறிக்க) சுத்திக்கிட்டு இருக்கும். ஏற்கனவே சந்தணம் தடவிய திருச்செந்தூர் மொட்டையில் மொளகா அரைக்க ரெடியா இருப்பாங்க. " 5 ரூவா தான் சாமி. கோவில்ல வந்து இல்லன்னு சொல்ல கூடாது சாமி" இப்படி சாமி எல்லாம் பலமாக இருக்கும். அழகாக ஆரம்பிப்பார்கள் - "ராசா நீ ! ஊரு மெச்ச வாழ்பவன் நீ ! உன் மனைவி மக்கள் எல்லாம் நல்லாருக்கும்" . கடைசில வரப்போகும் தோசம் மேட்டர் தெரியாம பார்ட்டி சந்தோசமா தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கிட்டு இருக்கும். "உனக்கு ஒரு தோசம் இருக்கு ராசா. அதுக்கு நீ பரிகாரம் பண்ணனும் ராசா. இல்லன்னா உனக்கு அது நல்லதுல்ல ராசா. நானே அதை பண்ணி தறேன் ராசா. ஒரு 100 ரூ ஆகும் ராசா" - கல்கத்தா காளி, மாரி என்று நம்மை பயம் காட்ட எல்லோரையும் துனைக்கு அழைத்து கொள்வார்கள். வேணாம்னு சொல்லவும் முடியாம், கோவிலுக்கு வந்து பணத்தையும் நிம்மதியையும் தொலைத்து விட்டு செல்வார்கள்.

(தொடரும்...)


2 comments:

Anonymous said...

Inraiya Joshiyarkalai pattri nallaa therinchi vachchirikireenga...nalla velai naan yaarukkum Joshiyam solrathillai...

- Kumaran.

Anonymous said...

ammam Jathaga Balan mattumthaan sollvaar:-)