Monday, September 26, 2005

ஒரு ஹீரோ.. ரெண்டு காமெடியன்கள்..

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த புதிது. முதன் முதலாக விடுதி வாழ்க்கை. முதல் வருடத்தில் எனது அறையில் மூன்று பேர். நான், தனபால், வேல். வேலுவின் வீட்டிற்க்கு (செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமம்) கூட போய் ரெண்டு நாள் ஆட்டம் போட்டு விட்டு வந்தோம்.

விசயம் இது தான். சேர்ந்த புதிதில், பொது பாடம் நிறைய இருக்கும். மற்ற துறை மாணவர்களும் ஒரே வகுப்பில் இருப்போம். எங்கள் வகுப்பில் பசங்க மட்டும் தான். ஒரே வறட்சி. எப்போதும் வகுப்பு முடிந்ததும் எங்க கூடவே வரும் வேலு, கொஞ்ச நாளாக மட்டம் போட ஆரம்பித்தான். ஒரு நாள் பார்த்ததில், அடுத்த துறை பிகர் ஒன்றுடன் சேர்ந்து வந்து கொண்டிருந்தான். வகுப்பு முடிந்ததும் தேங்கி விட்டு, கடைசியில் அந்த பிகருடன் சேர்ந்து விடுதி வரை பேசி கொண்டே வந்தான். இது வழக்கமா தொடர்ந்தது.

தனபால் துறை பிகர் என்பதால், அவனுக்கு லேசான ஒரு புகைச்சல். என்னிடம் புலம்பி கொண்டிருப்பான். எங்களுக்கு தெரியும், அது ஏதோ பையன் பாவம் என்று பேசுகிறது என்று. பையன் சில காலமாக ரொம்ப எங்களை கழட்டி விடுவதும், ரொம்ப பீற்றி கொள்வதும் அதிகமானதால், தனபாலும் நானும் பேசி, நண்பருக்கு ஒரு ஆப்பு வைப்பது என்று முடிவு செய்தொம். அதன் படி...


ஒரு நாள் பையனை அறையில் வைத்து, எங்களுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி, "டேய்! மச்சி! நீ பெரிய ஆளுடா. வகுப்பு முடிஞ்சி ரெண்டு பேரும் சேர்ந்தே வறீங்க. சேர்ந்தே போறீங்க. பெரிய ஆளுடா நீ", ஆப்புவை மெதுவாக வைக்க ஆரம்பித்தேம். பையன் 'மன்மதன்' சிம்பு மாதிரி உள்ளுக்குள் பறப்பது நன்றாக தெரிந்தது. லேசாக வெட்க பட்டு வைத்தான். "எப்படிடா கண்டு புடிச்சிங்க!" ஆப்பு வேலை செய்ய ஆரம்பித்தது. "மச்சி! எவ்வளவு நாள் தாண்டா காலேஜ்குள்ளேயே சுத்திக்கிட்டு இருப்பீங்க. சென்னையில் இடமா இல்ல. எங்கயாவது வெளியே கூட்டிட்டு போடா" தனபால் ஐடியா கொடுத்தான். "அவள் வருவாளாடா" இது பையன். பையனுக்கு உற்சாக டானிக் கொடுத்து (அட்வைஸ்) தேத்தி அனுப்பினோம், 'எப்படியோ நாளைல இருந்து பையன் நம்ம கூட தான் வருவான்' என்ற நம்பிக்கையில்.

அடுத்த நாள் மாலையில் வேலு அறையில் சோகமாக இருந்தான். கப்பல் கவுந்து விட்டது நன்றாக தெரிந்தது. லேசா தான் வைக்க நினைத்த ஆப்பு கொஞ்சம் பெரிதா போய்விட்டது. அதற்க்கப்புறம் கல்லூரி முடியும் வரை இரண்டும் பேசிக்கவே இல்லை. இவனும் 'அவ என்ன பெரிய இவளா. நா என்ன பெரிசா கேட்டுட்டேன். பீச்சிக்கு போலாமான்னு தானே கேட்டேன். பெரிய இவா மாதிரி இனி என்னிடம் பேசாதேன்னு சொல்லிட்டா' புலம்பினான். 'விட்றா மச்சி! உன் மூஞ்சிக்கெல்லாம் இது ரொம்ப கம்மிடா' நாங்கள் இருவரும் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தோம்.


அதற்க்கப்புறம் வேலு ஒரே சோகப்பாடல்களாக கேட்டு கொண்டிருப்பான். தனபால் நன்றாக கவிதை எழுதுவான். நன்றாக மேடையில் பாடவும் செய்வான். அவன் தான் வேலுவுக்கு கவிதை சப்ளை பண்ணிக்கொண்டிருப்பான். நாங்கள் வைத்த ஆப்பினால், தன் கவிதைக்கு ஒரு ரசிகன் கிடைத்த சந்தோசம் அவனுக்கு. வேலு என்னையும் கவிதை கேட்டு படுத்துவான். கிட்ட தட்ட அவனை ஒரு ஹீரோ மாதிரியும் எங்க ரொண்டு பேரையும் சுத்தி இருக்கற காமெடியன்கள் மாதிரியும் நினைத்து கொண்டிருந்தான். நாங்கள் தான் அவன் கதைக்கு வில்லன்கள் என்று அவனுக்கு தெரியாது.

நானும் அவ்வப்போது பழைய பாடல்களை சுட்டு கவிதை என்று கொடுப்பேன். பையனுக்கு அவ்வளவாக சினிமா பாடல்கள் தெரியாததால், ஆஹா..ஓகோ ன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். அப்படி சுட்டு படம் காட்டிய பாடல் ஒண்ணு. 'ஆட்டோ ராஜா' படத்தில் இருந்து சுட்ட பாடல். அருமையான பழைய எஸ்.பி.பி பாடல்.

பாடலுக்கு இங்கே சொடுக்குங்கள்.

2 comments:

Ganesh Gopalasubramanian said...

அட என்ன சிவா நீங்களும் ஓட்டு கேட்க ஆரம்பிச்சுட்டீங்க....
சரி போடலைன்னா எனக்கும் ஆப்பு வச்சிருவீங்க......

சிவா said...

உங்களுக்கு ஆப்பு எங்கே வைக்க.. எதாவது ஆவனும்னா சொல்லுங்க..ஐடியா தரேன். ;-)